பயனுள்ள துணுக்குகள்

بسم الله الرحمن الرحيم

எது உண்மையில் கைசேதத்தை ஏற்படுத்தக் கூடியது?

இப்னுல் ஜவுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஓர் அடியானுக்கு கைசேதத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமானது, அவனுடைய பாவங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவனின் பாவமன்னிப்புக் கோரல் குறைந்து காணப்படுவதும், அவன் கபுருக்கு நெருங்கும் போதெல்லாம் அவனிடத்தில் பலவீனத் தன்மை பலம் பெற்றுக் காணப்படுவதுமாகும்".

(அத்தப்ஸிரா: 55)

மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று...!

இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"பெருநாள் தினங்களில் சந்தோசத்தை வெளிப்படுத்துவது, மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளங்களில் நின்றும் உள்ளதாகும்".

(பத்ஹுல் பாரி: 2/443)

நேர்வழி பிரவேசிக்கும் கதவுகள்.

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக நேர் வழியானது மூன்று கதவுகளின் மூலமாக அடியானிடத்தில் நுழைகிறது. அவன் தன்னுடைய காதைக் கொண்டு செவியேற்பதின் மூலமாகவும், அவனுடைய கண்களைக் கொண்டு பார்ப்பதின் மூலமாகவும், அவனுடைய உள்ளத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வதின் மூலமாகவும் இவ்வாறு நிகழுகிறது".

(இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா: 1/40)

தக்பீரின் பெறுமதி!

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"அடியான் அல்லாஹு அக்பர் என்று கூறுவது, உலகம் மற்றும் அதில் உள்ளவற்றை விட மிகச் சிறந்ததாகும்".

(பத்ஹுல் பாரி இப்னு ரஜப்: 8/9)

துல்ஹஜ் முதல் பத்தில் நபியவர்கள்.

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"நபியவர்கள் துல்ஹஜ் மாதத்தின் பத்து தினங்களில் அதிகமாக துஆ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.
மேலும், அதனில் லாஇலாஹ இல்லல்லாஹ், தக்பீர், அல்லாஹ்வைப் புகழ்தல் ஆகியவற்றை அதிகரிக்குமாறும் ஏவுவார்கள்".

(ஸாதுல் மஆத்: 2/360)

அதிகமான மக்கள் அறியாதிருக்கக்கூடிய தும்மலுடன் தொடர்புபட்ட ஒழுக்கங்களில் ஒன்று...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நிச்சயமாக நபியவர்கள் தும்மினால், தனது கையை கொண்டு அல்லது, ஆடையை கொண்டு முகத்தை மூடிக் கொள்வார்கள். மேலும், தனது சத்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்".

(திர்மிதி: 2745)

இறைச்சி சாப்பிடுவோம்!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"நீங்கள் இறைச்சி சாப்பிடுங்கள்! நிச்சயமாக அது நிறத்தை தெளிவாக்கும், வயிற்றை வெறுமையாக்கும்,
தேகத்தை அழகாக்கும்".

(அத்திப்புன் நபவி - பக்கம்: 340)

ஏன் கலக்கம் உண்டாகிறது?

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

கலக்கம், அது உண்டாவதற்குக் காரணம் பாவங்களாகும்.

(அத்தாஉ அத்தஆ - பக்கம்: 21)

வதந்திகளுக்கு அஞ்சாத நபர்!

ஸாலிஹ் அல் பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"யாரிடத்தில் சரியான அறிவு இருக்கிறதோ, அவருக்கு வதந்திகள் தீங்கிழைக்க மாட்டாது".

(இகாஸதுல் லஹ்பான்)

பிரயோசனமளிக்காத இஸ்திஃக்பார்.

ஸாலிஹ் அல் பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"தனது செயல்கள் மூலம் பாவங்களில் நிலைத்து நின்று, நாவின் மூலம் மாத்திரம் அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறுபவனைப் பொருத்தளவில், அவன் ஒரு பொய்யனாவான். அவனுடைய பாவமன்னிப்பு அவனுக்கு பிரயோசனமளிக்க மாட்டாது".

(அல்குதப் அல்மின்பரிய்யா: 1/226)

பொய்யர்களின் தவ்பா!

புளைழ் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"பாவங்களைக் களையாத பாவமன்னிப்புத் தேடல், பொய்யர்களின் தவ்பாவாகும்".

(அல்குதப் அல்மின்பரிய்யா: 1/226)