தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 5

26)

فإذا قيل لك: كم مراتب الدين؟ فقل: مراتب الدين ثلاثة: الإسلام، والإيمان، والإحسان، والدليل حديث عمر بن الخطاب -رضي الله عنه- في صحيح مسلم رقم(8)، وفيه أن جبريل عليه السلام سأل رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- عن الإسلام، ثم عن الإيمان، ثم عن الإحسان.

மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மார்க்கத்தின் படித்தரங்கள் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகிய மூன்றாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, ஸஹீஹ் முஸ்லிம் (இல: 8) இல் இடம்பெற்றுள்ள உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். அதில் இடம்பெற்றுள்ளதாவது, 'நிச்சயமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றியும் பிறகு ஈமானைப் பற்றியும் பிறகு இஹ்ஸானைப் பற்றியும் கேட்டார்கள்.'

27)

فإذا قيل لك: كم أركان الإسلام؟ فقل: خمسة أركان، والدليل حديث عبدالله بن عمر -رضي الله عنهما- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان } متفق عليه

இஸ்லாத்தில் கடமைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஐந்து தூண்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸாகும். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி சொல்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தைக் கொடுப்பதும், ஹஜ்ஜை நிறைவேற்றுவதும், ரமளான் நோன்பு நோற்பதுமாகும்.' (புகாரி முஸ்லிம்)

28)

فإذا قيل لك: ما هو الإيمان؟ فقل: هو نطق باللسان، واعتقاد بالقلب، وعمل بالجوارح، وهو يزيد بالطاعة، وينقص بالمعصية.والدليل على أنه نطق باللسان، وعمل بالجوارح حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة، فأفضلها: قول: لا إله إلا الله، وأدناها: إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان } متفق عليه والدليل أنه اعتقاد بالقلب حديث عمر الذي تقدم في أركان الإيمان، وقول الله تعالى: { وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ } المائدة: 23 وعن أنس بن مالك -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { آية الإيمان حب الأنصار، وآية النفاق بغض الأنصار } متفق عليهوالدليل على أنه يزيد بالطاعة... قول الله تعالى: { إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَاناً وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ } الأنفال: 2 وقوله تعالى: { هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَاناً مَعَ إِيمَانِهِمْ } الفتح: 4 وقوله: { وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَاناً } المدثر: 31 والدليل على أنه ينقص بالمعصية أدلة زيادته، فإنه قبل أن يزيد كان ناقصا.قال الإمام البخاري في (كتاب الإيمان) من «صحيحه» باب (33): فإذا ترك شيئا من الكمال فهو ناقص. وحديث شعب الإيمان الذي ذكرناه قريبا، وحديث أبي سعيد الخدري -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان } أخرجه مسلم. وفيه أن إنكار المنكر من الإيمان

ஈமான் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நாவால் மொழிவதும், உள்ளத்தால் உறுதி கொள்வதும், உருப்புக்களால் அமல் புரிவதுமாகும் என்று கூறு. அத்துடன் அது, வழிப்படுவதின் மூலம் அதிகரிக்கும், மாறுசெய்வதின் மூலம் குறையும். மேலும், ஈமான் என்பது நாவால் மொழிவதும், உருப்புக்களால் அமல் புரிவதுமாகும் என்பதற்கான ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ஈமானாகிறது எழுபத்து சொச்சம் அல்லது அறுபத்து சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் சிறந்தது لا إله إلا الله என்ற வார்த்தையாகும். மேலும், அவற்றில் மிகத்தாழ்ந்தது பாதையைவிட்டும் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றை அகற்றுவதாகும். இன்னும், வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்.' (புகாரி முஸ்லிம்) மேலும், ஈமானாகிறது உள்ளத்தால் உறுதிகொள்வதாகும் என்பதற்கான ஆதாரமாக ஈமானின் தூண்கள் தொடர்பான விடயத்தில் முன்வைத்த உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். இன்னும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வையுங்கள் எனக் கூறினர்.' (அல்மாயிதா: 23) மேலும், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்: 'ஈமானின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதும், நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸாரிகளை கோபிப்பதுமாகும்.' (புகாரி முஸ்லிம்) இன்னும், ஈமானாகிறது அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரமாக, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வைப்பற்றி ஞாபகமூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், அவர்கள் தமது இரட்சகன் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்.' (அல்அன்பால்: 2) இன்னும் கூறுகின்றான்: 'அவனே நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அவர்களது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக அமைதியை இறக்கிவைத்தான்.' (அல்பத்ஹ்: 4) மேலும் கூறுகின்றான்: 'நம்பிக்கை கொண்டோர் (தமது) ஈமானை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும்,' (அத்முத்தஸ்ஸிர்: 31) ஈமானாகிறது அதிகரிக்கும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் ஈமானாகிறது பாவத்தின் காரணமாகக் குறையும் என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஏனெனில், அது அதிகரிக்க முன்னதாகக் குறைவானதாகவே இருக்கும். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் தனது ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுல் ஈமான் எனும் பகுதியில் 33ம் பிரிவின் கீழ் கூறுகின்றார்: 'ஈமானைப் பூர்த்தி செய்யும் விடயங்களில் இருந்து எதாவது ஒன்றை விட்டுவிட்டால் அது குறைவானதாக இருக்கும்.' அத்தோடு, சற்றும் முன்னர் நாம் குறிப்பிட்ட ஈமானின் கிளைகள் தொடர்பான ஹதீஸும், அபூஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கும், 'உங்களில் எவர் ஒரு தீய காரியத்தைக் காண்கிறாரோ அவர் அதனைத் தனது கையால் தடுக்கட்டும், அவ்வாறு அவரால் முடியாத போது தனது நாவால் தடுக்கட்டும், அதற்கும் அவரால் முடியாதபோது தனது உள்ளத்தால் தடுக்கட்டும். அதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும்.' (முஸ்லிம்) என்ற ஹதீஸும் (இதற்கான ஆதாரங்களாகும்.) மேலும், இச்செய்தியில் நிச்சயமாக பாவத்தைத் தடுப்பது ஈமானில் நின்றும் உள்ளதாகும் என்ற விபரம் உள்ளடங்கியுள்ளது.

29)

فإذا قيل: كم أركان الإيمان؟ فقل: ستة أركان، والدليل حديث عمر بن الخطاب في «صحيح مسلم» أن النبي - صلى الله عليه وعلى آله وسلم- سأله جبريل عليه السلام عن الإيمان فقال: { أن تؤمن بالله، وملائكته، وكتبه، ورسله، واليوم الآخر، وتؤمن بالقدر خيره وشره } قال: صدقت. وهو متفق عليه من حديث أبي هريرة

ஈமானின் கடமைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஆறு கடமைகள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். 'நிச்சயமாக நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈமானைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வையும், அவனது மலக்குமார்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும் விசுவாசம் கொள்வதாகும் எனவும் கத்ரை அது நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் விசுவாம் கொள்வதாகும் எனவும் பதிலளித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்: நீர் உண்மை சொல்லிவிட்டீர் எனக் கூறினார்கள். இன்னும், இச்செய்தி அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியாக புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

30)

فإذا قيل لك: ما تعريف الإحسان بين العبد وربه؟ فقل: هو { أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك } كما جاء في حديث عمر بن الخطاب في «مسلم» رقم 8

அடியானுக்கும் அவனது இரட்சகனுக்கும் இடையில் உள்ள இஹ்ஸானின் வரைவிலக்கணம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், முஸ்லிம் எனும் கிரந்தத்தில் (இல: 8) உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெறுவதைப் போன்று, நீ அல்லாஹ்வை வணங்கும் போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் வணங்கு, அவ்வாறு உனக்கு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் வணங்கமுடியாவிட்டால் நிச்சயமாக அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நினைவில் வணங்குவதாகும் எனக் கூறு.

இன்ஷா அல்லாஹ் தொடரும்