தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 4

21)

فإذا قيل لك: من أول الرسل إلى أهل الأرض، ومن آخرهم؟ فقل: أولهم نوح عليه السلام، وآخرهم أفضل الأنبياء نبينا محمد -صلى الله عليه وعلى آله وسلم-، فبعثته أول العلامات الصغرى للساعة، ويجب علينا الإيمان بهم جميعا، والدليل حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال عن أهل المحشر يوم القيامة: { فيأتون نوحا فيقولون: يا نوح أنت أول الرسل إلى أهل الأرض، وسماك الله عبدا شكورا } متفق عليه.والدليل على أن آخرهم محمد -صلى الله عليه وعلى آله وسلم- قول الله تعالى: { مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ } الأحزاب: 40 وحديث ثوبان -رضي الله عنه- أنه -صلى الله عليه وعلى آله وسلم- قال: { وأنا خاتم النبيين لا نبي بعدي } أخرجه مسلم.والدليل على أنه أفضل الأنبياء حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { أنا سيد الناس يوم القيامة } متفق عليه. والدليل على أنه أول علامات الساعة: حديث سهل ابن سعد -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { بعثت أنا والساعة هكذا } وأشار بأصبعيه. متفق عليه. وعن أنس بن مالك -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { بعثت أنا والساعة كهاتين } وضم السبابة والوسطى. متفق عليه.والدليل أنه يجب علينا الإيمان بهم جميعا، ومن كفر بواحد منهم فقد كفر بهم جميعا؛ قول الله تعالى: { آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ } البقرة: 285 وقوله تعالى: { إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلاً * أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقّاً وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَاباً مُهِيناً } النساء: 150 151

பூமியில் உள்ளோருக்கு முதலாக அனுப்பப்பட்ட தூதர் யார்? என்றும் அவர்களில் இறுதியானவர் யார் என்றும் உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவர்களில் முதலாமவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் என்றும் இறுதியானவர் நபிமார்களில் தலைசிறந்தவரான எங்களுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள் என்றும் நீ கூறு. மேலும், அவரது வருகை மறுமை நாளின் சிறிய அடையாளங்களின் துவக்கமாகும். அத்துடன் அவர்கள் அனைவரையும் விசுவாசம் கொள்வது எமது கடமையுமாகும். அதற்கு ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் உள்ளவர்களின் நிலை குறித்துக் கூறுகையில்: அவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வருகைதந்து நூஹே! நீங்கள் பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதலாவது தூதராக உள்ளீர்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு நன்றியுள்ள அடியார் என்றும் பெயர் சூட்டியுள்ளான் ... (என்று கூறுவார்கள்.') (புகாரி முஸ்லிம்)

இன்னும் நபியவர்கள், அவர்களில் இறுதியானவர் என்பதற்காக ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'முஹம்மத், உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்.' (அல்அஹ்ஜாப்: 40)

மேலும், ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது, 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: இன்னும் நான் நபிமார்களின் முத்திரையாகவுள்ளேன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.' (முஸ்லிம்)

இன்னும், நபியவர்கள் நபிமார்களில் மிகச் சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நான் மறுமைநாளில் மனிதர்களின் தலைவனாக இருக்கின்றேன்.' (புகாரி முஸ்லிம்)

மேலும் நபியவர்கள், மறுமை நாளின் சிறிய அடையாளங்களில் முதல் அடையாளம் என்பதற்குச் சான்றாக ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நான் நபியாக அனுப்பப்பட்டதும், மறுமை நாளும் இவ்வாறு இருக்கின்றன.' எனக்கூறி தனது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள். (புகாரி முஸ்லிம்) இன்னும், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம்பெற்ற அறிவிப்பில்: 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். நான் நபியாக அனுப்பப்பட்டதும், மறுமை நாளும் இவை இரண்டைப் போன்றும் இருக்கின்றன.' என்று கூறி தனது சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். (புகாரி முஸ்லிம்)

மேலும், அவர்கள் அனைவரையும் விசுவாசம் கொள்வது எமது கடமை என்பதற்கும், அவர்களில் ஒருவரையேனும் நிராகரித்தால் அது அனைவரையும் நிராகரித்ததிற்குச் சமனாகும் என்பதற்குமான சான்றாக, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.' (அல்பகரா: 285)

மேலும் கூறுகின்றான்: 'நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்குமிடையில் பாரபட்சம் காட்ட விரும்பி, '(தூதர்களில்) சிலரை நாம் நம்பிக்கை கொள்வோம். மற்றும் சிலரை நிராகரிப்போம்' என்று கூறி (நிராகரிப்பு, நம்பிக்கை ஆகிய) இவற்றுக்கு மத்தியில் ஒரு பாதையை எடுத்துக் கொள்ள நாடுகின்றார்களோ அவர்கள் தாம் உண்மையான நிராகரிப்பாளர்களாவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையையே நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.' (அன்னிஸா: 150, 151)

22)

فإذا قيل لك: جميع الرسل إلى ماذا يدعون الناس؟ فقل: يدعونهم إلى عبادة الله وحده لا شريك له، والدليل قول الله تعالى: { وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولاً أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ } النحل: 36

அனைத்துத் தூதர்களும் எதன்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களாக இருந்தனர்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், தனித்தவனும், இணையற்றவனுமாகிய அல்லாஹ்வை வணங்குவதின் பால் அவர்களை அழைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வை வணங்குங்கள். மேலும், (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) 'தாகூத்'தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.' (அந்நஹ்ல்: 36)

23)

فإذا قيل لك: ما تعريف التوحيد الذي جميع الرسل يدعون إليه؟ فقل: هو إفراد الله بالعبادة، والدليل قول الله تعالى: { وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً } النساء: 36 وقوله تعالى: { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ }

எல்லா தூதர்களும் அழைப்புவிடுத்த தவ்ஹீத் - ஏகத்துவம் - இன் வரைவிலக்கணம் யாது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், வணக்கத்தைக் கொண்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்.' (அன்னிஸா: 36) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: 'அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக!' (அல்இஹ்லாஸ்: 1)

24)

فإذا قيل لك: كم أقسام توحيد الله عز وجل؟ فقل: ثلاثة أقسام:

1. توحيد الربوبية

2. توحيد الألوهية

3. توحيد الأسماء والصفات.

والدليل قول الله تعالى: { بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ } وقوله تعالى: { رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيّاً } مريم: 65 فهاتان الآيتان فيها أنواع التوحيد الثلاثة

அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் வகைகள் எத்தனை என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று வகை என்று கூறு.

1. தவ்ஹீதுர் ருபூபிய்யாஹ்

2. தவ்ஹீதுல் உழூஹிய்யாஹ்

3. தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்

அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்.)' மேலும் கூறுகின்றான்: 'அவனே வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டுக்குமிடைப்பட்டவற்றினதும் இரட்சகன். எனவே, அவனையே நீர் வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அவனுக்கு நிகரான எவரையேனும் நீர் அறிவீரா?' (மர்யம்: 65) இவ்விரு வசனங்களிலும் தவ்ஹீதின் மூன்று வகைகளும் உள்ளடங்கியிருக்கின்றன.

25)

فإذا قيل لك: ما أعظم حسنة، وما أعظم سيئة؟ فقل: أعظم حسنة هو توحيد الله عز وجل، وأعظم سيئة هو الشرك بالله عز وجل، والدليل قول الله تعالى: { إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ } النساء: 48 وقوله تعالى: { فَمَا لَنَا مِنْ شَافِعِينَ * وَلا صَدِيقٍ حَمِيمٍ * فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ } الشعراء: 100 102 عن أنس بن مالك -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { شفاعتي لأهل الكبائر من أمتي } أخرجه أحمد، وهو حديث صحيح. وهذا يدل على أن أسعد الناس بشفاعة النبي -صلى الله عليه وعلى آله وسلم- هم أهل الكبائر من المسلمين، ولا شفاعة لمشرك.وعن جابر بن عبدالله -رضي الله عنهما- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { من مات لا يشرك بالله شيئا دخل الجنة، ومن مات يشرك بالله شيئا دخل النار } أخرجه مسلم

நன்மையின் மிக மகத்தானதும், தீமையின் மிக விபரீதமானதும் எவை என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நன்மையின் மிக மகத்தானது அல்லாஹ்வின் ஏகத்துவமும், தீமையின் மிக விபரீதமானது அல்லாஹ்வைக் கொண்டு இணைவைப்பதுமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை, தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான்.' (அன்னிஸா: 48) மேலும் கூறுகின்றான்: ' எனவே, எமக்குப் பரிந்துரை செய்வோர் எவருமில்லை. இன்னும் உற்ற நண்பனும் இல்லை. நிச்சயமாக (உலகிற்கு) திரும்பிச் செல்லுதல் எமக்கு இருந்தால் நாம் நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.' (அஷ்ஷுஅராஉ: 100-102) நபியவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'எனது பரிந்துரை என்னுடைய உம்மத்தில் பெரும்பாவம் செய்யதவர்களுக்கு இருக்கும்.' (அஹ்மத், இது ஸஹீஹ் எனும் தரத்தையுடைய செய்தியாகும்.) இன்னும் இச்செய்தியானது, நிச்சயமாக நபியவர்களின் பரிந்துரை மூலம் மனிதர்களில் மிக மகிழ்ச்சிக்குரியவர்கள் முஸ்லிம்களில் உள்ள பெரும்பாவம் செய்யதவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. மேலும், இணைவைக்கும் ஒருவனுக்கு அப்பரிந்துரை இருக்காது. நபியவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணைவைக்காத நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். மேலும், யார் அவனுக்கு ஏதாவது ஒன்றைக் கொண்டு இணைவைத்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் நரகம் நுழைந்துவிட்டார்.' (முஸ்லிம்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்