“ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” தமிழாக்கம் – 05

بسم الله الرحمن الرحيم

4. ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது கூற வேண்டியது.

اللهُمَّ أعُوْذ بِكَ أنْ أَضِلَّ أوْ أُضَلَّ أوْ أزِلَّ أوْ أزَلَّ أوْ أَظْلِمَ أوْ أُظْلَم أوْ أجْهَل أو يُجْهَل عَليَّ

பொருள்: அல்லாஹ்வே! நான் வழிதவறிப் போவதில் இருந்தும் அல்லது, நான் வழிகெடுக்கப்படுவதில் இருந்தும் அல்லது, நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது, வழிசருகச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது, நான் அநீதி இழைப்பதில் இருந்தும் அல்லது, நான் அநீதி இழைக்கப்படுவதில் இருந்தும் அல்லது, நான் பிறரிடம் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது, என்னிடம் பிறர் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இச்செய்தி அபூதாவுத் (5094) எனும் கிரந்தத்தில் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், ஸஹீஹுத் திர்மிதி (36667) எனும் கிரந்தத்திலும் இச்செய்தியைக் காணலாம்.

5. ஒருவர் தனது வீட்டினுள் பிரவேசிக்கும் போது கூற வேண்டியது.

24. "ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைய நாடி, நுழையும் போதும் உணவு பரிமாறும் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால், ஷைத்தான் தனது தோழர்களை நோக்கி இன்று உங்களுக்கு இராத்தரிப்பும் இராப்போசனமும் கிடையாது! என்பான். மேலும், அவர் அவ்வாறு நுழையும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்தாதிருந்தால், ஷைத்தான் தனது தோழர்களை நோக்கி இன்று நீங்கள் உங்களுக்கு இராத்தரிக்க ஓர் இடத்தைப் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்! என்பான். மேலும், அவர் தனது உணவு பரிமாறலின் போதும் வீட்டில் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயரை ஞாபகப்படுத்தாத போது ஷைத்தான் தனது தோழர்களை நொக்கி நீங்கள் உங்களுக்குரிய இராத்தரிக்கும் இடத்தையும் இராப்போசனத்தையும் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்!" என்பான்.

இச்செய்தி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2018) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

6. இரவில் தூக்கத்தைவிட்டும் எழுந்தால் அல்லது, ஒருவர் தனது வீட்டைவிட்டும் வெளியேறினால் ஓத வேண்டியது.

25. إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لاَ أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَى بَعْضُكُم مِّن بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُواْ وَأُخْرِجُواْ مِن دِيَارِهِمْ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَاتَلُواْ وَقُتِلُواْ لأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ ثَوَابًا مِّن عِندِ اللَّهِ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ لاَ يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُواْ فِي الْبِلادِ مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلاً مِّنْ عِندِ اللَّهِ وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ لِّلأَبْرَارِ وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْكُمْ وَمَا أُنزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لاَ يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلاً أُوْلَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اصْبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَاتَّقُواْ اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

பொருள்: "நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்தவர்களாகவும் தங்களின் விலாப்புறங்களின் மீது (சாய்ந்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூறுவார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புப் பற்றிச் சிந்தித்து எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணாகப்படைக்கவில்லை நீ தூய்மையானவன். ஆகவே, நீ எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக! (என்றும் பிரார்த்திப்பார்கள்.) எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைவிக்கின்றாயோ நிச்சயமாக நீ அவனை இழிவுபடுத்திவிட்டாய். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் எவருமில்லை. உங்கள் இரட்சகனை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்! என்று ஈமானின் பால் அழைக்கும் ஓர் அழைப்பாளனின் அழைப்பை எங்கள் இரட்சகனே நிச்சயமாக நாம் செவியேற்று நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இரட்சகனே! எமது பாவங்களை எங்களுக்கு மன்னித்து, எமது தீமைகளை எம்மைவிட்டும் போக்கி நல்லவர்களுடன் எம்மை மரணிக்குச் செய்வாயாக! எங்கள் இரட்சகனே! உனது தூதர்களின் மூலம் எமக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! மேலும், மறுமைநாளில் எங்களை நீ இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீர் வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டாய் (என்றும் பிரார்த்திப்பார்கள்.) உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் (சரி) நற்செயல்கள் புரிவோரின் நற்செயலையும் நான் வீணாக்கமாட்டேன் என அவர்களின் இரட்சகன் அவர்களுக்குப் பதிலளித்தான். (ஏனெனில்,) உங்களில் சிலர் மற்றும் சிலரில் உள்ளவர்களே. ஹிஜ்ரத் செய்தோர், தமது வீடுகளைவிட்டும் வெளியேற்றப்பட்டோர், எனது பாதையில் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோர், போரிட்டோர், (அதில்) கொல்லப்பட்டோர் ஆகியோரின் தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நான் அழிப்பேன். அவர்களைச் சுவனச் சோலைகளில் நிச்சயமாக நான் நுழைவிப்பேன். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள நற்கூலியாகும். அல்லாஹ்விடமே அழகிய கூலி இருக்கின்றது. நிராகரித்தோர் நகரங்களில் (உல்லாசமாகச்) சுற்றித் திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம். (இது) சொற்ப இன்பம் தான் பின்னர் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமே! தங்குமிடத்தில் அது மிகக் கொட்டதாகும். எனினும், யார் தங்களது இரட்சகனை அஞ்சி நடக்கின்றார்களோ அவர்களுக்கு சுவனச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள விருந்துபசாரமாகும். அல்லாஹ்விடமிருப்பதே நல்லவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். நிச்சயமாக வேதமுடையோரில் அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் தங்களுக்கு இறக்கப்பட்டதையும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக நம்பிக்கை கொள்வோரும் உள்ளனர். அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள். இத்தகையோருக்குரிய கூலி அவர்களது இரட்சகனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள்! (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைபிடியுங்கள்! இன்னும், உறுதியாக இருங்கள்! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளளுங்கள்!" (ஆலு இம்றான்: 190-200)

மேலும், இதற்கான சான்றை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் புகாரி (183) மற்றும் முஸ்லிம் (763) ஆகிய கிரந்தங்களில் காணலாம்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.