தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 2

தவ்ஹீதின் அடிப்படைகள்

1)

إذا قيل لك: من خلقك؟ فقل: خلقني الله، وخلق جميع المخلوقات, والدليل قول الله تعالى: {اللَّهُ خَالِق كُلِّ شَيْءٍ} الزمر: 62

உன்னைப் படைத்தவன் யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், என்னையும், அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தவன் அல்லாஹ் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்.' (அஜ்ஜுமர்: 62)

2)

إذا قيل لك: من ربك؟ فقل: الله ربي ورب كل شيء, والدليل قول الله تعالى: {قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ} الأنعام: 164. وقوله تعالى : الحمد لله رب العالمين الفاتحة: 2

உன்னுடைய இரட்சகன் யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ்வே எனது இரட்சகனாகவும் அனைத்து வஸ்துக்களினது இரட்சகனாகவும் இருக்கின்றான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ் அல்லாதவனையா இரட்சகனாக நான் எடுத்துக் கொள்வேன்? அவனே அனைத்துப் பொருட்களினதும் இரட்சகனாக இருக்கின்றான் என (நபியே!) நீர் கூறுவீராக!' (அல்அன்ஆம்: 164) மேலும் கூறுகின்றான்: 'அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.' (அல்பாதிஹா: 2)

3)

إذا قيل لك: لماذا خلقك الله؟ فقل: خلقنا لعبادته، والدليل قول الله تعالى: {وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْأِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ} الذاريات: 56

அல்லாஹ் ஏன் உன்னைப் படைத்தான்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவனை வணங்குவதற்காக வேண்டி எங்களைப் படைத்தான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'என்னை வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.' (அத்தாரியாத்: 56)

4)

إذا قيل لك: ما دينك؟ فقل: ديني هو دين الإسلام الحق, والدليل قول الله تعالى: { إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْأِسْلامُ} آل عمران: 19 وقوله تعالى: {هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ} التوبة: 33 وقوله تعالى: {وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ} آل عمران: 85

உன்னுடைய மார்க்கம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், எனது மார்க்கம் உண்மையான இஸ்லாமிய மார்க்கமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் தான்.' (ஆல இம்றான்: 19) மேலும் கூறுகின்றான்: 'அவனே தனது தூதரை நேர்வழியையும், சத்திய மார்க்கத்தையும் கொண்டு அனுப்பிவைத்தான்.' (அத்தவ்பா: 33) இன்னும் கூறுகின்றான்: 'யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகின்றானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்?' (ஆல இம்றான்: 85)

5)

فإذا قيل لك: من نبيك؟ فقل: نبيي ونبي هذه الأمة جميعا هو محمد رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-، والدليل قول الله تعالى: {كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ} الأحزاب: 40 ، وقوله تعالى: {هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولاً مِنْهُمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ} الجمعة:2 ، وقوله تعالى: {فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ} الأعراف:185 وانظر 8.

உன்னுடைய நபி யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், என்னுடைய நபியும் இந்த உம்மத்தினர் அனைவருடைய நபியும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'முஹம்மத், உங்களது ஆண்களின் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்.' (அல்அஹ்ஜாப்: 40) மேலும் கூறுகின்றான்: 'அவன் தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவனது வசனங்களை அவர் அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். மேலும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.' (அல்ஜும்ஆ: 2) இன்னும் கூறுகின்றான்: 'ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், (எழுத்தறிவற்ற) உம்மி நபியாகிய அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும், அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்பிக்கை கொள்கிறார். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அவரையே பின்பற்றுங்கள்.' (அல்அஃராப்: 158) மற்றும் இலக்கம் 8ஐப் பார்க்க.

6)

فإذا قيل لك: ما أول واجب على العبد؟ فقل: تعلم توحيد الله عز وجل، والدليل حديث ابن عباس -رضي الله عنهما- قال: لما بعث النبي -صلى الله عليه وعلى آله وسلم- معاذ بن جبل إلى اليمن قال له: { إنك تقدم على قوم من أهل الكتاب, فليكن أول ما تدعوهم إلى أن يوحدوا الله تعالى } متفق عليه، وهذا لفظ البخاري

அடியான் மீதுள்ள முதல் கடமை எது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ்வின் ஏகத்துவத்தை (ப் பற்றிக்) கற்றுக் கொள்வதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். அவர்கள் கூறுகிறார்கள்: 'நபியவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பிய போது அவரை நோக்கி (நபியவர்கள் பின்வருமாறு) கூறினார்கள்: நிச்சயமாக நீர் வேதம் கொடுக்கப்பட்ட ஒரு கூட்டத்திடம் செல்ல இருக்கின்றீர். எனவே, நீர் அவர்களை அழைக்கும் முதல் விடயம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவை ஒருமைப்படுத்துவதாக இருக்கட்டும்' என்றார்கள். (புகாரி முஸ்லிம்) இது இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாசகமாகும்.

7)

فإذا قيل لك: ما معنى لا إله إلا الله؟ فقل: معناها: لا معبود بحق إلا الله، والدليل قول الله تعالى: { فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ } محمد: 19 وقوله: { ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ } الحج: 62

لا إلهَ إلاّ اللهُ என்ற வாசகத்தின் பொருள் யாது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அதனுடைய பொருள் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படத் தகுதியானவன் வேறுயாருமில்லை என்பதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறெவரும் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக!' (முஹம்மத்: 19) மேலும் கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்.' (அல்ஹஜ்: 62)

8)

فإذا قيل لك: ما معنى محمد رسول الله؟ فقل: معناها أنه رسول الله إلى الناس كافة، من الجن والإنس، والدليل قول الله تعالى: { وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ } سبأ: 28 وعن أبي هريرة رضي اله عنه أن النبي صلى الله عليه وسلم قال: { ... وأرسلت إلى الخلق كافة } رواه مسلم ويجب علينا جميعا طاعته وتصديقه واجتناب ما نهى عنه، والدليل قول الله تعالى { قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ } النور: 54 وقوله تعالى: { هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ } يس: 52 وعن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم } متفق عليه

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார் என்பதின் கருத்து யாது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அதனுடைய கருத்து, நிச்சயமாக அவர்கள் ஜின் மற்றும் மனிதன் உள்ளிட்ட முழு மனித சமுதாயத்திற்கும் தூதராகவுள்ளார்கள் என்பதுவாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(நபியே!) மனிதர்கள் அனைவருக்கும் (அன்றி) நாம் உம்மை அனுப்பவில்லை.' (ஸபஉ: 28) மேலும், அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'படைப்பினங்கள் அனைவருக்குமாக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.' (முஸ்லிம்) இன்னும், அவரை வழிப்படுவதும், உண்மைப்படுத்துவதும், அவர் தடுத்தவற்றை தவிர்ந்து கொள்வதும் எங்கள் அனைவர் மீதும் கடமையாகும். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் : 'நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், இன்னும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று (நபியே) நீர் கூறுவீராக!' (அந்நூர்: 54) மேலும் கூறுகின்றான்: 'அர்ரஹ்மான் வாக்களித்தது இதுதான். தூதர்கள் உண்மையே உரைத்தனர் (என்று கூறப்படும்)' (யாஸீன்: 52) இன்னும் நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நான் எதைவிட்டும் உங்களைத் தடுத்துள்ளேனோ அதை நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும், எதைக் கொண்டு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை முடியுமான அளவு எடுத்து நடவுங்கள்.' (புகாரி முஸ்லிம்)

9)

فإذا قيل: ما حق الله على عباده؟ فقل: حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا، والدليل حديث معاذ بن جبل أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا } متفق عليه

தனது அடியார்கள் மீது அல்லாஹ்வின் உரிமை எது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், தனது அடியார்கள் மீது அல்லாஹ்வின் உரிமையாகிறது அவனை அவர்கள் வணங்குவதும், எந்த ஒன்றைக் கொண்டும் அவனுக்கு இணைவைக்காமல் இருப்பதுமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'அடியார்கள் மீது அல்லாஹ்வின் உரிமையானது அவனை அவர்கள் வணங்குவதும், அவனுக்கு எந்த ஒன்றைக் கொண்டும் இணைவைக்காமல் இருப்பதுமாகும். மேலும், அல்லாஹ் மீது அடியார்களின் உரிமையானது எவர்கள் எந்த ஒன்றைக் கொண்டும் இணைவைக்காமல் இருக்கின்றார்களோ, அவர்களை வேதனை செய்யாமல் இருப்பதுவாகும்.' (புகாரி முஸ்லிம்)

10)

فإذا قيل لك: ما هو الشرك؟ فقل: هو عبادة غير الله عز وجل، فكل ما كان عبادة لله عز وجل فصرفه لغير الله شرك، والدليل قول الله تعالى: { وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً } النساء: 36

ஷிர்க் - இணைவைத்தல் - என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக வணக்கம் புரிதலாகும் என்று கூறு. எவையெல்லாம் அல்லாஹ்வுக்குச் செலுத்தப்பட வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருக்கின்றனவோ அவற்றை அல்லாஹ் அல்லாதோருக்காகத் திருப்புவது இணைவைப்பாகும். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்.' (அந்நிஸா: 36)

இன்ஷா அல்லாஹ் தொடரும்