அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஈடேற்றம் பெற…!

بسم الله الرحمن الرحيم

எமக்கு முன்வாழ்ந்த சமுகங்கள் விடயத்தில் அல்லாஹ்வுடைய வழிமுறையானது, அவனது சட்டதிட்டங்களுக்கு எவர்கள் மறுசெய்கின்றார்களோ அவர்கள் மீது தனது தண்டனையை இறக்கிவைப்பதாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் நபிமார்களுடன் அவர்களது சமுதாயத்தினர் எப்படி முரண்பட்டுச் செயற்பட்டனர் என்றும், அப்போது அவர்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்பட்டன என்றும் பிரஸ்தாபித்துள்ளான்.