நாம் யாரிடம் தெளிவை நாடிச் செல்ல வேண்டும்?!

بسم الله الرحمن الرحيم

மனித சமுதாயம் நேர்வழிபெறும் பொருட்டு தனது தூதை எத்திவைப்பதற்காக அதி உத்தமம் பெற்றவர்களையே அல்லாஹுத்தஆலா தேர்ந்தெடுத்துள்ளான். வானவர்களில் உத்தமரான ஜிப்ரீலையும், தூதர்களில் தலைசிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் சமுதாயங்களில் உன்னதமான ஸஹாபாக்களையும் இம்மகத்தான பணிக்காக அவன் தேர்ந்தெடுத்திருப்பது இவ்வமானிதம் எக்காலத்திலும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடக்கூடாது என்பதற்கான வழிகாட்டலே அன்றி வேறில்லை.