தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 8

42)

فإذا قيل لك: متى تقوم الساعة؟ فقل: أمر الساعة من أمور الغيب التي لا يعلمها إلا الله، والدليل قول الله تعالى: { إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ } لقمان: 34 وقوله: { إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ } فصلت: 47 وقول النبي -صلى الله عليه وعلى آله وسلم-: { لا يعلم متى تقوم الساعة إلا الله } أخرجه البخاري من حديث ابن عمر -رضي الله عنهما-

மறுமை எப்பொழுது நிகழும்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மறுமைபற்றிய விடயம் அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அறியாத மறைவான விடயங்களில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மறுமை பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே உள்ளது.' (லுக்மான்: 34) மேலும் கூறுகின்றான்: 'மறுமை பற்றி அறிவு அவனிடமே திருப்பப்படும்.' (புஸ்ஸிலத்: 47) இன்னும் நபியவர்கள் கூறினார்கள்: 'மறுமை எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள்.' இச்செய்தியை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இருந்தும் பதிவு செய்துள்ளார்கள்.

43)

فإذا قيل لك: كم شروط قبول العمل؟ فقل: ثلاثة:

الإسلام، فالكافر لا يقبل الله عمله، والدليل قول الله تعالى: { وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُوراً } الفرقان: 23 وقال تعالى : { إنما يتقبل الله من المتقين } المائدة: 27

அமல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று என்று கூறு.

1. இஸ்லாம்: காபிரைப் பொருத்தளவில் அவனது அமலை அல்லாஹ் பொருந்திக்கொள்ளமாட்டான். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்த செயலின் பக்கம் நாம் வந்து, பரத்தப்பட்ட புழுதியாக அதை நாம் ஆக்கி விடுவோம்.' (அல்புர்கான்: 23) மேலும் கூறுகின்றான்: 'அதற்கு (மற்றவர்), பயபக்தியாளர்களிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் (எனக் கூறினார்.)' (அல்மாயிதா: 27)

الإخلاص، والدليل: { وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ } البينة: 5 وفي حديث أبي هريرة القدسي أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه } رواه مسلم.

2. இஹ்லாஸ் - மனத்தூய்மை - : அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு,அல்லாஹ்வை வணங்குமாறும், (தவிர அவர்கள் ஏவப்படவில்லை.) (அல்பய்யினா: 5) மேலும், அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸுல் குத்ஸியில் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் இணைவைப்பாளர்களின் இணைவைப்பைவிட்டும் தேவையற்றவனாக இருக்கின்றேன். எவர் என்னுடன் நானல்லாத வேரொருவனை இணைத்து ஓர் அமலைச் செய்கிறானோ, அவனையும் அவனது இணைவைப்பையும் விட்டுவிடுவேன்.' (முஸ்லிம்)

المتابعة لرسول الله -صلى الله عليه وعلى آله وسلم-، والدليل حديث أم المؤمنين عائشة -رضي الله عنها-: أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { من عمل عملا ليس عليه أمرنا فهو رد } أخرجه مسلم

3. நபியவர்களைப் பின்துயர்வதாக இருத்தல்: அதற்கான ஆதாரமாவது, முஃமின்களின் தாயான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஓர் அமலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப்படத்தக்கதாகும்.' (முஸ்லிம்)

44)

فإذا قيل لك: كم أنواع التوسل المشروع؟ فقل: ثلاثة أنواع:

التوسل بأسماء الله وصفاته، والدليل قول الله تعالى: { وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا } الأعراف: 180 وقوله تعالى: { وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ } النمل:19

توسل العبد إلى الله تعالى بعمله الصالح، والدليل قول الله تعالى: { الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ } آل عمران: 16 وقوله: { رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ } آل عمران: 53 ومن السنة حديث الثلاثة الذين انطبقت عليهم صخرة، فسدت عليهم الغار، فتوسل كل واحد منهم بخالص عمله. متفق عليه من حديث عبد الله بن عمر رضي الله عنهما.

التوسل بدعاء الرجل الصالح، والدليل حديث أنس بن مالك -رضي الله عنه- قال بينما رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- يخطب إذ جاءه رجل فقال: يا رسول الله قحط المطر، فادع الله أن يسقينا، فدعا فمطرنا

மார்க்கம் அனுமதித்த வஸீலா – அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடுதல் - இன் வகைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று வகைகள் என்று கூறு.

1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளைக் கொண்டு வஸீலாத் தேடுவது: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள்.' (அல்அஃராப்: 180) மேலும் கூறுகின்றான்: 'உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.' (அந்நம்ல்: 19)

2. அடியான் தனது ஸாலிஹான அமலைக் கொண்டு அல்லாஹுத்தஆலாவிடம் வஸீலாத் தேடுவது: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இவர்கள், எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் நம்பிக்கை கொண்டோம்! எனவே, எமது பாவங்களை எமக்காக மன்னித்து, நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக! என்று கூறுவார்கள்.' (ஆல இம்றான்: 16) மேலும் கூறுகின்றான்: 'எங்கள் இரட்சகனே! நீ இறக்கியவற்றை நாம் நம்பிக்கை கொண்டு இத்தூதரையும் பின்பற்றினோம். எனவே, எங்களைச் சாட்சியாயர்களுடன் பதிவு செய்து கொள்வாயாக (என்றும் கூறினார்.)' (ஆல இம்றான்: 53) இன்னும் ஸுன்னாவில் இருந்து (ஆதாரமாக) பாராங்கல் மூவரை அடைத்துக் கொண்ட செய்தியைக் குறிப்பிடலாம். அவர்களைக் குகை அடைத்துக் கொண்டது. அவர்களில் ஒவ்வொருவரும் தாம் புரிந்த தூய்மையான அமலை முன்வைத்து வஸீலாத்தேடினார்கள். (இச்செய்தி) புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இருந்தும் பதிவாகியுள்ளது.

3. ஸாலிஹான மனிதனின் துஆவைக் கொண்டு வஸீலாத் தேடுவது: அதற்கான ஆதாரமாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நபியர்கள் உரை நிகழ்த்தும் போது அவர்களிடத்தில் ஒரு மனிதன் சமுகந்தந்து, அல்லாஹ்வின் தூதரே! மழை நின்றுவிட்டது. அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு நீர் புகட்டுமாறு பிரார்த்தனை செய்யுங்கள் என விண்ணப்பித்தான். எனவே, அவர்கள் பிரார்த்தனை செய்ய எங்களுக்கு மழைபொழிந்தது.

45)

فإذا قيل لك: هل في الدين بدعة حسنة؟ فقل: كل بدعة ضلالة، والدليل حديث العرباض المذكور برقم 19 وفيه: { كل بدعة ضلالة } وحديث جابر ابن عبدالله -رضي الله عنهما- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- كان إذا خطب... يقول: { أما بعد: فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة } أخرجه مسلم

மார்க்கத்தில் அழகிய பித்அத் இருக்கின்றதா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், எல்லா பித்அத்துக்களும் வழிகேடாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, (முன்பு) இல: 19ல் குறிப்பிடப்பட்ட அல்இர்பாழ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். அதில் இடம்பெற்றுள்ளதாவது, 'அனைத்து பித்அத்துக்களும் வழிகேடாகும்.' மேலும் (ஆதாரமாக), ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் உரை நிகழ்த்தினால் (பின்வருமாறு) கூறுவார்கள்: 'அடுத்து, நிச்சயமாக பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டல்களில் சிறந்த வழிகாட்டல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டலாகும். விடயங்களில் மிகத் தீயது புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் - நூதன அனுஷ்டானம் - வழிகேடாகும்.' (முஸ்லிம்)

وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: { أنا فرطكم على الحوض فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا ليرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم قال: إنهم مني فيقال: إنك لا تدري ما بدلوا بعدك فأقول: سحقا سحقا لمن بدل بعدي } متفق عليه

மேலும், அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் (இடம்பெற்றுள்ளதாவது), நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'நான் தடாகத்திற்கருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். எவர் அதனை வந்தடைகிறாரோ அவர் அதனில் இருந்தும் அருந்துவார். மேலும், எவர் அதிலிருந்து அருந்துகிறாரோ அவருக்கு அதற்குப்பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (அப்போது) சில கூட்டம் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களை அறிவேன், அவர்களும் என்னை அறிவார்கள். பின்பு எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரையிடப்படும். (அப்போது நபியவர்கள்) நிச்சயமாக அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுவார்கள். (அதற்கு), உங்களுக்குப் பிறகு அவர்கள் மாற்றியமைத்ததை நிச்சயமாக நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறப்படும். அதன்போது நான், எனக்குப் பிறகு மாற்றியமைத்தவருக்குத் தூரம் உண்டாகட்டும், தூரம் உண்டாகட்டும் என்பேன்.' (புகாரி முஸ்லிம்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்