தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 7

36)

فإذا قيل لك: ماذا تعتقد في البعث والوقوف والحساب وأخذ الكتاب؟ فقل: أعتقد أنه حق، والدليل قول الله تعالى: { زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا قُلْ بَلَى وَرَبِّي لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ وَذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ } التغابن: 7 وقوله تعالى { فتول عنهم يوم يدع الداع إلى شيء نكر خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر } القمر: 6-8 وقوله تعالى: { فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ * فَسَوْفَ يُحَاسَبُ حِسَاباً يَسِيراً * وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُوراً * وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ * فَسَوْفَ يَدْعُو ثُبُوراً * وَيَصْلَى سَعِيراً } الانشقاق: 7 12 وقوله تعالى { يوم ندعوا كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرءون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الأخرة أعمى وأضل سبيلا } الإسراء: 71-72

மறுமையில் எழுப்பப்படுவது, தரித்து நிற்பது, கேள்விகணக்குக் கேட்கப்படுவது, ஏட்டைப் பெறுவது தொடர்பாக நீர் எதனை நம்பிக்கையாகக் கொண்டுள்ளாய்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நான் நிச்சயமாக அதனை உண்மை என நம்பியுள்ளேன் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிராகரித்தோர் தாம் எழுப்பப்பட மாட்டோம் என எண்ணுகின்றனர். அவ்வாறல்ல, எனது இரட்சகன் மீது சத்தியமாக நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்தவை குறித்து பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும் என (நபியே) நீர் கூறுவீராக!' (அத்தகாபுன்: 7) மேலும் கூறுகின்றான்: 'எனவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அவர்களுக்கு) வெறுப்பான விடயத்தின் பால் அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களது பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்கள் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல், மண்ணறைகளிலிருந்து அழைப்பாளரை நோக்கி விரைந்தவர்களாக வெளிப்படுவார்கள். இந்நிராகரிப்பாளர்கள், இது கஷ்டமான நாள் என்று கூறுவார்கள்.' (அல்கமர்: 6-8) இன்னும் கூறுகின்றான்: 'எனவே, எவருடைய பதிவேடு அவரது வலது கையில் வழங்கப்படகின்றதோ அவர் இலகுவான முறையில் விசாரணை செய்யப்படுவார். அவர் (சுவர்க்கத்தில் உள்ள) தன் குடும்பத்தினரிடம் மகிழ்வுடன் திரும்பிச் செல்வார். எவனுடைய பதிவேடு அவனது முதுகுக்குப் பின்னால் வழங்கப்படுகின்றதோ, அவன் (தனக்கு) நாசத்தையே அழைப்பான். மேலும், அவன் நரகத்தில் நூழைவான்.' (அல்இன்ஷிகாக்: (7-12) மேலும் கூறுகின்றான்: 'மனிதர்கள் ஒவ்வொருவரையும் தத்தமது தலைவருடன் நாம் அழைக்கும் நாளில், எவரது பதிவேடு அவரது வலது கையில் கொடுக்கப்படுகின்றதோ அவர்கள் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். யார் இ(வ்வுலகத்)தில் (சத்தியத்தைக் காணாது) குருடனாகிவிட்டானோ அவன் மறுமையிலும் குருடனே. மேலும், அவனே மிகவும் வழி தவறியவன்' (அல்இஸ்ரா: 71,72)

37)

فإذا قيل لك: هل المؤمنون يرون ربهم يوم القيامة؟ فقل: نعم يرونه في عرصات القيامة وفي الجنة، والدليل قول الله تعالى: { وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ * إِلَى رَبِّهَا نَاظِرَةٌ } القيامة: 22 23 وفي الصحيحين من حديث جرير بن عبدالله -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إنكم سترون ربكم يوم القيامة } وأخرج مسلم من طريق حماد بن سلمة، عن ثابت، عن عبدالرحمن بن أبي ليلى، عن صهيب -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إذا أدخل أهل الجنة يقول الله تبارك وتعالى: تريدون شيئا أزيدكم؟ فيقولون: ألم تبيض وجوهنا؟ ألم تدخلنا الجنة وتنجينا من النار؟ قال: فيكشف الحجاب، فما أعطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل }والكفار لا يرون الله عز وجل يوم القيامة والدليل قول الله تعالى: { كلا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ } المطففين: 15

முஃமீன்கள் தங்களது இரட்சகனை மறுமை நாளில் பார்ப்பார்களா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஆம், மறுமையில் விசாரணை செய்யும் இடங்களிலும், சுவனபதியிலும் அவனைப் பார்ப்பார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அந்நாளில் சில முகங்கள் தமது இரட்சகனைப் பார்த்து மலர்ச்சியுற்றிருக்கும்.' (அல்கியாமா: 22,23) மேலும், புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது. நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். 'நிச்சயமாக நீங்கள் உங்களது இரட்சகனை மறுமைநாளில் பார்ப்பீர்கள்.' இன்னும் இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹம்மாத் இப்னு ஸலமா அவர்கள் வழியாக, அவர் ஸாபித் அவர்களையும் அவர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ ளைலா அவர்களையும் அவர் ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் தொட்டு வரும் அறிவிப்பில் அறிவிக்கும்போது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'சுவனவாசிகள் சுவனத்தில் நூழைவிக்கப்படும் போது அல்லாஹுத்தஆலா கூறுவான்: நான் உங்களுக்கு அதிகரிக்க வேண்டி ஏதாவது ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? அதற்கு அவர்கள்: நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்தில் இருந்தும் பாதுகாத்து சுவனத்தில் நுழைவிக்கவில்லையா? என வினவுவார்கள். எனவே, (அப்போது அவன் தனது) திரையை அகற்றுவான், தங்களுடைய இரட்சகனைப் பார்ப்பதற்குக் கிடைத்த சந்தோசத்தைவிட அவர்கள் விரும்பக்கூடிய எந்த ஒன்றும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்காது.' மேலும், காபீர்கள் மறுமைநாளில் அல்லாஹ்வைப் பார்க்க மாட்டார்கள். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அவ்வாறன்று, அந்நாளில் அவர்கள் தமது இரட்சகனை(ப் பார்ப்பதை) விட்டும் நிச்சயமாகத் தடுக்கப்படுவார்கள்.' (அல்முதப்பிபீன்: 15)

38)

فإذا قيل لك: ماذا تعتقد في القرآن الكريم الذي في المصحف؟ فقل: أعتقد أنه كلام الله عز وجل، ليس بمخلوق، والدليل قول الله تعالى: { وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلامَ اللَّهِ } التوبة: 6

அல்முஸ்ஹபில் இருக்கும் சங்கைமிக்க அல்குர்ஆன் விடயத்தில் எதனை நம்பிக்கையாகக் கொண்டுள்ளாய்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நிச்சயமாக அது அல்லாஹ்வுடைய பேச்சு என்றும் (அது) படைக்கப்பட்டதன்று என்றும் நம்பிக்கையாகக் கொண்டுள்ளேன் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இணைவைப்பாளர்களில் எவரேனும் உம்மிடம் புகலிடம் கோரினால், அவர் அல்லாஹ்வின் வார்த்தையைச் செவியேற்கும் வரை அவருக்கு புகலிடம் அளிப்பீராக!' (அத்தவ்பா: 6)

39)

فإذا قيل لك: هل القرآن عربي أم أعجمي؟ فقل: هو عربي، والدليل قول الله تعالى: { إِنَّا جَعَلْنَاهُ قُرْآناً عَرَبِيّاً لَعَلَّكُمْ تَعْقِلُونَ } الزخرف:3 وقوله تعالى: { نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ * عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ * بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ } الشعراء:193-195

அல்குர்ஆனானது அறபு மொழியைத் தழுவியதா? அல்லது வேற்றுமொழியைத் தழுவியதா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அது அறபு மொழியைத் தழுவியது என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு, இதனை அறபி (மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாம் ஆக்கினோம்.' (அஸ்ஸுஹ்ருப்: 4) மேலும் கூறுகின்றான்: 'எச்சரிக்கை செய்வோரில் நீர் இருப்பதற்காக நம்பிக்கைக்குரிய ரூஹு (எனும் ஜிப்ரீல்) உமது உள்ளத்தில் இதனைக் கொண்டு இறங்கினார். (இது) தெளிவான அறபு மொழியில் உள்ளதாகும்.' (அஷ்ஷுஅரா: 193-195)

40)

فإذا قيل لك: هل لله أسماء وصفات؟ فقل: نعم له أسماء وصفات تليق بجلاله، والدليل قول الله تعالى: { وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا } الأعراف: 180 وقوله: { وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ } النحل: 60 وقال تعالى : { قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد } وفي الصحيحين من حديث عائشة رضي الله عنها أن رجلا قال : { لأنها صفة الرحمن } فأقره رسول الله صلى الله عليه وسلم على ذلك. وأسماء الله عز وجل غير محصورة بعدد معلوم لنا؛ لقول النبي -صلى الله عليه وعلى آله وسلم-: { لا أحصي ثناء عليك... } أخرجه مسلم من حديث عائشة -رضي الله عنها-

அல்லாஹ்வுக்கு பெயர்களும், பண்புகளும் இருக்கின்றனவா? என்று உன்னித்தில் கேட்கப்பட்டால், ஆம். அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் பெயர்களும், பண்புகளும் உள்ளன என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள்.' (அல்அஃராப்: 180) மேலும் கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கோ உயரிய பண்பு உள்ளது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். ஞானமிக்கவன்.' (அந்நஹ்ல்: 60) இன்னும் கூறுகின்றான்: 'அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவும் இல்லை, அவன் (எவருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.' (அல்இஹ்லாஸ்: 1-4) புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக ஒரு மனிதர் (நபியவர்கள் முன்னிலையில்), 'ஏனெனில் அது நிச்சயமாக ரஹ்மானின் பண்பாகும்' என்று கூற நபியவர்கள் அதனை அங்கீகரித்தார்கள். மேலும், அல்லாஹ்வின் பெயர்கள் எங்களுக்கென்று அறிமுகமான எண்ணிக்கையைக் கொண்டு வரையறுக்கப்பட்டதன்று. ஏனெனில் நபியவர்கள் கூறும்போது: 'உம்மீது கீர்த்தியாக (எதனையும்) வரையறுக்க மாட்டேன்' என்கிறார்கள். இச்செய்தியை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸில் இருந்தும் பதிவு செய்துள்ளார்கள்.

41)

فإذا قيل لك: هل أحد غير الله يعلم الغيب؟ فقل: لا أحد يعلم الغيب إلا الله، والدليل قول الله تعالى: { وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ } آل عمران: 179 وقوله تعالى: { فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ } يونس: 20 وقوله تعالى: { وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَا إِلَّا هُوَ } الأنعام: 59

அல்லாஹ் அல்லாத வேறு எவரும் மறைவான விடயங்களை அறிவார்களா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் மறைவானவற்றை அறியமாட்டார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மேலும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தருபவனாக இல்லை.' (ஆல இம்றான்: 179) மேலும் கூறுகின்றான்: 'மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன.' (யூனுஸ்: 20) இன்னும் கூறுகின்றான்: 'அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள்.' (அல்அன்ஆம்: 59)

இன்ஷா அல்லாஹ் தொடரும்