தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 6

31)

فإذا قيل لك: ما حكم سب الله، وسب رسوله، وسب دينه، أو الاستهزاء بذلك؟ فقل: هذا كفر أكبر، من تعمده خرج من ملة الإسلام، والدليل قول الله تعالى: { قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ * لا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ } التوبة: 65 66

அல்லாஹ், அவனது தூதர், அவனது மார்க்கம் ஆகியவற்றைத் திட்டுவது அல்லது அதனைக் கொண்டு பரிகாசம் செய்வது போன்றவற்றின் சட்டம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், இது ஒரு பெரிய நிராகரிப்பாகும் என்று கூறு. யார் வேண்டுமென்று அதில் ஈடுபடுகின்றாரோ அவர் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிட்டார். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று (நபியே) நீர் கேட்பீராக! போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள்.' (அத்தவ்பா: 65,66)

32)

فإذا قيل لك: ما جزاء المؤمنين، وما جزاء الكافرين يوم القيامة؟ فقل: جزاء المؤمنين الجنة في أعلى عليين، والدليل قول الله تعالى: { إن الذين ءامنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَداً رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ } البينة: 7 8 وجزاء الكافرين النار في أسفل سافلين، والدليل قول الله تعالى: { وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ } فاطر: 36 والدليل أن الجنة في أعلى عليين قول الله تعالى: { وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى *عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى *عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى } النجم: 13 15

மறுமைநாளில் முஃமீன்கள் மற்றும் நிராகரிப்பாளர்களின் கூலி எத்தகையது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், முஃமீன்களின் கூலியானது உயர்ந்த இடத்தின் உயர்விஸ்தானத்திலுள்ள சுவனமாகும் எனக் கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிகின்றார்களோ, அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள். அவர்களின் கூலி அவர்களது இரட்சகனிடம் நிலையான சுவனச் சோலைகளாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பர். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது, எவர் தனது இரட்சகனை அஞ்சி நடக்கின்றாரோ அவருக்குரியதாகும்.' (அல்பய்யினா: 7,8) மேலும், நிராகரிப்பாளர்களின் கூலியானது தாழ்ந்த இடத்தின் மிகத்தாழ்ந்த இஸ்தானத்திலுள்ள நரகமாகும் எனக் கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பு உண்டு. அவர்கள் மரணித்துவிடும்படி தீர்ப்பளிக்கப்படவும் மாட்டார்கள். இன்னும், அதன் வேதனை அவர்களை விட்டும் இலகுபடுத்தப்படவும் மாட்டாது. நிராகரிக்கும் ஒவ்வொருவனுக்கும் நாம் இவ்வாறே கூலி வழங்குவோம்.' (பாதிர்: 36) மேலும், நிச்சயமாக சுவனமானது உயர்ந்த இடத்தின் உயர்விஸ்தானத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஸித்ரத்துல் முன்தஹா எனும் இடத்தில் இவர் மீண்டும் ஒரு தடைவ (ஜிப்ரீல் ஆகிய) அவரைக் கண்டார். அங்குதான் ஜன்னத்துல் மஃவா (எனும் சுவர்க்கம்) இருக்கிறது.' (அந்நஜ்ம்: 13-15)

والدليل أن النار في أسفل سافلين حديث البراء أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال فيما يروي عن ربه عزوجل: { اكتبوا كتاب عبدي في سجين، في الأرض السفلى } أخرجه أحمد في المسند وهو حديث صحيح. ولا نشهد بالجنة أو النار إلا لمن شهد له الدليل؛ لقول الله تعالى: { وَلا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ } الإسراء: 36

நிச்சயமாக நரகமானது, தாழ்ந்த இடத்தின் மிகத் தாழ்ந்த இஸ்தானத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரமாக அல்பர்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் தனது இரட்சகனைத் தொட்டும் அறிவிக்கும் அறிவிப்பில் கூறினார்கள்: என்னுடைய அடியானின் ஏட்டை கீழ்ப் பூமியில் இருக்கும் சிஜ்ஜீனிலே எழுதுங்கள்' (எனக் கூறுவான்.) இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்முஸ்னத் எனும் கிரந்தத்தில் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். இது ஒரு ஸஹீஹான ஹதீஸாகும். மேலும், ஆதாரம் யாருக்கு சாட்சி சொன்னதோ அவருக்கன்றி வேறு எவருக்கும் நாங்கள் சுவனம் அல்லது நரகத்தைக் கொண்டு சாட்சி சொல்ல மாட்டோம். ஏனெனில், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின்தொடராதீர்!' (அல்இஸ்ரா: 36)

33)

فإذا قيل لك: كم عدد الدور؟ فقل: ثلاثة:

دار الدنيا الفانية، والدليل قول الله تعالى: { وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ } آل عمران: 185

دار البرزخ، والدليل قول الله تعالى: { وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ } المؤمنون: 100

دار القرار، والدليل قول الله تعالى مخبرا عن مؤمن آل فرعون: { يَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ } غافر: 39

(மனிதன் வாழும் வாழ்க்கையின்) வீடுகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று என்று கூறு.

1. அழிந்து போகும் உலக வீடு: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இவ்வுலக வாழ்வு ஏமாற்றம் தரும் இன்பமேயன்றி வேறில்லை.' (ஆலஇம்றான்: 185)

2. திரைமறைவான வீடு: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு முன்னால் ஒரு திரை இருக்கின்றது.' (அல்முஃமினூன்: 100)

3. நிலையான வீடு: அதற்கான ஆதாரமாவது பிர்அவ்னுடைய குடும்பத்தில் ஒரு விசுவாசி கூறியது தொடர்பாக அல்லாஹுத்தஆலா தெரிவிக்கும் செய்தியாகும். 'எனது சமுகத்தினரே! இவ்வுலக வாழ்க்கை அற்ப இன்பமே! நிச்சயமாக மறுமையோ நிலையான வீடாகும் (என்றும் கூறினர்)' (அல்காபிர்: 39)

34)

فإذا قيل لك: ما أول منازل الآخرة؟ فقل: أول منازل الآخرة القبر، والدليل حديث عثمان بن عفان -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إن القبر أول منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينج منه فما بعده أشد منه } أخرجه الترمذي، وابن ماجه، وأحمد، وهو حديث حسن

மறுமையின் ஆரம்ப நிலை எது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மறுமையின் ஆரம்ப நிலை கப்ர் எனக் கூறு. அதற்கான ஆதாரமாவது உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். 'நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக கப்ர் மறுமையின் ஆரம்ப நிலையாகும். எனவே, அதிலிருந்து ஈடேற்றம் பெற்றுவிட்டால், அதற்குப் பிறகு அதைவிட மிக இலகுவானது இருக்கமுடியாது. மேலும், அதிலிருந்தும் ஈடேற்றம் பெறாவிட்டால் அதற்குப் பிறகு அதைவிட மிகக் கடுமையானது இருக்க முடியாது.' இச்செய்தியை இமாம்களான திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் பதிவுசெய்துள்ளார்கள். இன்னும் இது ஒரு ஹஸனான ஹதீஸாகும்.

35)

فإذا قيل لك: ماذا تعتقد في عذاب القبر ونعيمه؟ فقل: أعتقد أنه حق لمن كان له أهلا، والدليل حديث عائشة - رضي الله عنها- أنها سألت رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- عن عذاب القبر فقال: { عذاب القبر حق } متفق عليه، وهذا لفظ البخاري. وعنها أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- كان يتعوذ من فتنة القبر وعذاب القبر، ومن فتنة المسيح الدجال. متفق عليه. وفيه إثبات عذاب القبر، وفتنة القبر، وفتنة الدجال الأكبر. ومن الأدلة على نعيمه حديث البراء، وفيه: { وأما المؤمن فيقال: ألبسوه من الجنة، وافتحوا له بابا إلى الجنة فيأتيه من طيبها وروحها ويفسح له في قبره مد بصره } أخرجه أحمد في المسند وهو حديث صحيح

கப்ருடைய வேதனை மற்றும் அதனுடைய இன்பம் விடயத்தில் நீ எதனை நம்பிக்கையாகக் கொண்டுள்ளாய்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், எவர் அதற்கு உரித்தானவராக ஆகின்றாரோ அவருக்கு நிச்சயமாக அது உண்மையாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸாகும். 'நிச்சயமாக அவர்கள் நபியவர்களிடத்தில் கப்ருடைய வேதனை தொடர்பாக வினவினார்கள். அதற்கு நபியவர்கள்: கப்ருடைய வேதனை உண்மையாகும் என பதிலளித்தார்கள்.' (புகாரி முஸ்லிம்) மேலும், இச்செய்தி இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாசகமாகும். இன்னும், அன்னையவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நிச்சயமாக நபியவர்கள் கப்ருடைய சோதனையையும் அதனுடைய வேதனையையும் அல்மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையையும் விட்டும் பாதுகாப்புத்தேடக்கூடியவர்களாக இருந்தார்கள்.' (புகாரி முஸ்லிம்) எனவே, இச்செய்தியில் கப்ருடைய வேதனையையும் அதனுடைய சோதனையையும் மிகப் பெரிய தஜ்ஜாலின் சோதனையையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், அதனுடைய இன்பத்திற்கான ஆதாரங்களில் உள்ளதாவது, அல்பர்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியாகும். அதில் இடம்பெற்றுள்ளதாவது, 'முஃமினைப் பொருத்தளவில், அவருக்கு சுவனத்தின் ஆடையை அணியச் செய்யுங்கள், சுவனத்தை நோக்கிய பாதை ஒன்றை திறந்து கொடுங்கள், அதிலிருந்து அதன் நறுமணமும், சுகண்டியும் அவரை வந்தடைந்து கொண்டிருக்கட்டும் என்று சொல்லப்படும். மேலும், அவருக்கு கண்ணை எட்டிய தூரம் வரை கப்ரு விசாலமாக்கிக் கொடுக்கப்படும்.' இச்செய்தியை இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் தனது அல்முஸ்னத் எனும் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார். இது ஒரு ஸஹீஹான ஹதீஸாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்