தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 3

11)

فإذا قيل لك: فما حكم تصوير ذوات الأرواح؟ فقل: تصوير ذوات الأرواح من كبائر الذنوب، والدليل حديث ابن مسعود -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إن أشد الناس عذابا يوم القيامة المصورون } متفق عليه. وفي حديث أبي جحيفة -رضي الله عنه- قال: نهى رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- عن ثمن الكلب، وثمن الدم... ولعن المصور. أخرجه البخاري.

உயிருள்ளவற்றை படம்பிடிப்பதின் சட்டம் என்ன என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், உயிருள்ளவற்றை படம்பிடிப்பது பெரும்பாவங்களில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நிச்சயமாக மறுமை நாளில் மனிதர்களில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவோர் உருவமைப்பவர்களாவர்.' (புகாரி முஸ்லிம்) மேலும், அபூ ஜுஹைபா (ரழி) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: 'நபியவர்கள் நாய் விற்றுப் பெறப்பட்ட சம்பாத்தியத்தையும், உதிரத்திற்காகப் பெறப்பட்ட சம்பாத்தியத்தையும் - என்று தொடர்கிறது அவரது அறிவிப்பு - தடைசெய்தார்கள். மேலும், உருவமைப்பவனையும் சபித்தார்கள்.' (புகாரி)

12)

فإذا قيل لك: فما تعلق تصوير ذوات الأرواح بالشرك؟ فقل: إن التصوير خلق يكون به المصور مضاهيا ومشاركا لله عز وجل في ذلك، والدليل حديث عائشة -رضي الله عنها- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { أشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله } متفق عليه. وحديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: قال الله تعالى { ومن أظلم ممن ذهب يخلق كخلقي... } متفق عليه

உயிருள்ளவற்றை படம்பிடிப்பதிற்கும், இணைவைத்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று உன்னிடத்தில் வினவப்பட்டால், நிச்சயமாக படம்பிடித்தலானது படைத்தலாகும். அந்நடவடிக்கை மூலம் உருவமைப்பவரானவர் அது விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணையாளனாகவும், கூட்டாளனாகவும் ஆகிவிடுகின்றான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, ஆயிஷா (ரழி) அவர்களின் ஹதீஸாகும். (அதில் இடம்பெற்றுள்ளதாவது) 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: மறுமைநாளில் மனிதர்களில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவோர் அல்லாஹ்வினுடைய படைப்பிற்கு இணையாகுபவர்களாவர்.' (புகாரி முஸ்லிம்) மேலும், அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது: 'நிச்சயமாக அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்: என்னுடைய படைப்பைப்போன்று படைக்க நாடுபவனைவிட அநியாயக்காரன் யாரிருக்க முடியும்?' (புகாரி முஸ்லிம்)

13)

فإذا قيل: ما تعريف العبادة؟ فقل: هي اسم جامع لكل ما يحبه الله ويرضاه، والدليل قوله تعالى: { إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ } الزمر: 7

இபாதத் -வணக்கம்- இன் வரைவிலக்கணம் என்னவென்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் விரும்பக்கூடிய மற்றும் பொருந்திக் கொள்ளக்கூடிய அனைத்து வகையான விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு பெயர்ச் சொல்லாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவனாவான். அவன் தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை பொருந்திக்கொள்ளமாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அதை அவன் உங்களுக்குப் பொருந்திக் கொள்வான்.' (அஸ்ஸுமர்: 7)

14)

فإذا قيل لك: أين الله؟ فقل: الله في السماء، مستو على عرشه، والدليل قول الله تعالى: { أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ } الملك: 16 وقوله تعالى: { الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى } طه: 5 وحديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر, يقول: من يدعوني فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له } متفق عليه. والنزول يكون من أعلى

அல்லாஹ் எங்கு இருக்கின்றான்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் வானத்திற்கு மேல் தனது அர்ஷின் மேல் உயர்ந்தான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'வானத்தில் உள்ளவன் உங்களைப் பூமிக்குள் உள்வாங்கி விடமாட்டான் என்று, நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அப்போது அது பலமாக அசையும்.' (அல்முல்க்: 16) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: 'அர்ரஹ்மான் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மேல் உயர்ந்தான்.' (தாஹா: 4) இன்னும், அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது, 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இரவினதும் மூன்றில் ஒருபகுதி எஞ்சியிருக்கும் நிலையில் எங்களுடைய இரட்சகன் உலகின் முதல் வானத்திற்கு இறங்கி, யார் என்னை அழைக்கின்றாரோ அவருக்கு நான் பதிலளிப்பேன், யார் என்னிடத்தில் கேட்கின்றாரோ அவருக்குக் கொடுப்பேன், யார் என்னிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கின்றாரோ அவரை மன்னிப்பேன் என்றும் கூறுவான்.' (புகாரி முஸ்லிம்) எனவே, இறங்குதலானது மேலிருந்து கீழ்நோக்கியே இடம்பெற முடியும்.

15)

فإذا قيل لك: هل الله معنا؟ فقل: الله عز وجل معنا بعلمه، والدليل قول الله تعالى: { وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ } الحديد: 4 وقوله: { وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الْأَرْضِ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ } الأنعام: 3 قال ابن كثير: المراد أنه الله الذي يعلم ما في السموات وما في الأرض، من سر وجهر

அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றானா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் எங்களுடன் அவனது அறிவைக்கொண்டு இருக்கின்றான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'மேலும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்.' (அல்ஹதீத்: 4) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: 'வானங்களிலும், பூமியிலும் (உண்மையாக வணங்கப்படும்) அல்லாஹ் அவன் தான். உங்கள் இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிவான். மேலும், நீங்கள் சம்பாதிப்பவற்றையும் அவன் நன்கறிவான்.' (அல்அன்ஆம்: 3) இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இவ்வசனம் குறித்துப் பேசுகையில்: 'நிச்சயமாக அல்லாஹ் ஆகிறவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவைபற்றிய இரகசியம், பரகசியம் ஆகியவற்றை அறிபவனாகவுள்ளான்' என்கிறார்.

16)

فإذا قيل لك: ما تعريف الإسلام؟ فقل: هو الاستسلام لله بالتوحيد، والانقياد له بالطاعة، والخلوص من الشرك. والدليل قول الله تعالى: { فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ } الحج: 34 وقوله: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ } آل عمران: 102

இஸ்லாத்தின் வரைவிலக்கணம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஏகத்துவத்தைக் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிவதும், வழிப்படுவதைக் கொண்டு கீழ்படிவதும், இணைவைப்பில் இருந்து நீங்கிக் கொள்வதுமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.' (அல்ஹஜ்: 34)

மேலும் கூறுகின்றான்: 'நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்குப் பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாகப் பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.' (ஆல இம்ரான்: 102)

17)

فإذا قيل لك: هل دين الإسلام كامل، أم يحتاج إلى تكميل؟ فقل: هو دين كامل، والدليل قول الله تعالى: { الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْأِسْلامَ دِيناً } المائدة: 3

இஸ்லாம் மார்க்கம் பூர்த்தியானதா? அல்லது பூர்த்தி செய்யப்பட வேண்டியதா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அது பூர்த்தியானது என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம்.' (அல்மாயிதா: 3)

18)

فإذا قيل لك: من أين يأخذ المسلم دينه؟ فقل: يأخذ المسلم دينه من القرآن والسنة على فهم السلف الصالح، والدليل قول الله تعالى: { أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ } العنكبوت: 51 وقوله تعالى: { فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ } النساء: 59 وقوله تعالى: { اهْدِنَا الصِّرَاط المُسْتقِيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلا الضَّالِّينَ } الفاتحة:6- 7 وقوله تعالى: { وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيراً } النساء: 115 وانظر الحديث الذي بعد هذا

முஸ்லிமானவன் தனது மார்க்கத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்வான்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், முஸ்லிமானவன் தனது மார்க்கத்தை ஸலபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இருந்து பெற்றுக் கொள்வான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(நபியே) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா?' (அல்அன்கபூத்: 51)

மேலும் கூறுகின்றான்: '(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விடயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்.' (அன்னிஸா: 59)

இன்னும் கூறுகின்றான்: 'நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.' (அல்பாதிஹா: 6,7)

இன்னும் கூறுகின்றான்: 'எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கொட்டது.' (அன்னிஸா: 115) மேலும், இதற்குப் பின்னால் இடம்பெற்றிருக்கும் ஹதீஸைப் பாருங்கள்.

19)

فإذا قيل لك: ما عقيدتك؟ فقل: أنا سني سلفي، والدليل حديث العرباض بن سارية -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور؛ فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة } أخرجه أبوداود وغيره، وهو حديث حسن

உன்னுடைய அகீதா என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நான் ஒரு ஸுன்னி - ஸுன்னாஹ் வழி நடக்கக்கூடியவன் - மற்றும் ஸலபி - ஸலப்களின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டவன் - என்று கூறு. அதற்கான ஆதாரமாக அல்இர்பாழ் இப்னு ஸாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் அமைகின்றது. அவர் தனது செய்தியில்: 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். எனவே, உங்கள் மீது என்னுடைய வழிமுறையையும், நேர்வழி நடந்த கலீபாக்களினது வழிமுறையையும் இருக்கின்றன. அவற்றை கடைவாய்ப்பற்களினால் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்களைவிட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். நிச்சயமாகப் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் - நூதன அனுஷ்டானம் - ஆகும். இன்னும், பித்அத்துக்கள் ஒவ்வொன்றும் வழிகேடாகும்' என்று குறிப்பிட்டார்கள். (அபூதாவுத் மற்றும் அதுவல்லாத கிரந்தங்களில் இச்செய்தி பதிவாகியுள்ளது. மேலும், இது ஹஸன் எனும் தரத்தைப் பெற்ற ஒரு ஹதீஸ் ஆகும்.)

இன்ஷா அல்லாஹ் தொடரும்